சிந்திக்க சில வசனம்: (நபியே!) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி;) "நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி" என்று சொல்லும்;. அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை. அல் குர்ஆன் - 2:120!



சிந்திக்க சில பொன்மொழிகள்: 'நீங்கள் இகாமத் சொல்லுவதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது நீங்கள் அமைதியான முறையிலும் கண்ணியமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்குக் கிடைத்த ரக்அத்களை (ஜமாஅத்துடன்) தொழுங்கள்; உங்களுக்குத் தவறிப் போனதைப் பூர்த்தி செய்யுங்கள். நூல்: புகாரி



Monday, 28 June 2010

தமிழக அரசின் 2010 - 2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகை



தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தபட்டோருக்கான 2010 - 2011 ஆண்டிற்கான கல்வி உதவி தொகையை அறிவித்து உள்ளது. இந்த கல்வி தொகை 3 நிலைகளாக உள்ள மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

1 - 10 வகுப்பு வரை:

தகுதிகள் :

  1. கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
  2. குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
  3. வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது
  4. ஒரு குடும்பத்தில் 2 பேருக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது

பயன்கள் :

  1. கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3500 ரூபாய்
  2. சேர்கை கட்டணம் அதிகபட்சமாக 500 ரூபாய்
  3. விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
  4. கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
  5. ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.62 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :

  • சாதி சான்றிதல் நகல் (Xerox)
  • பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் )
  • வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும் 
சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:
புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10, 2010
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26, 2010

கூடுதல் தகவல்கள் : 

  1. புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (Premetric Fresh Appl) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
  2. ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை,இணைக்கப்பட்டுள்ள புதுப்பித்தல் விண்ணப்பத்தை (Renewal Form) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
  3. பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

11, 12 , ITI, டிப்ளமோ (Diploma), ஆசிரியர் பயிற்சி , பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு , ஆராய்ச்சி படிப்பு (Ph.D):

தகுதிகள்:
  1. கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
  2. குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
  3. வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
  1. கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 3000 முதல் 7000 வரை
  2. 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
  3. விடுதி மற்றும் ஊக்க தொகைகள் உண்டு
  4. கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
  5. ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 11.60 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
  • சாதி சான்றிதல் நகல் (Xerox)
  • பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
  • வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
  • உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10, 2010
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26, 2010

கூடுதல் தகவல்கள் :
  1. புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (Premetric Fresh Appl) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்
  2. ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, புதுப்பித்தல் விண்ணப்பம் (Renewal Claim) (Premetric Claim Appl) மற்றும் (Premetric Claim) ஆகிய விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
  3. பூர்த்தி செய்யப்பட வினப்பதை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும் , தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

தொழிற்படிப்புகள் ( Engineering )

தகுதிகள் :
  1. கடைசியாக எழுதிய இறுதி தேர்வில் குறைந்தது 50% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்
  2. குடும்ப ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும்
  3. வேறு எந்த அரசு உதவியும் பெற்றிருக்க கூடாது

பயன்கள் :
  1. கல்வி கட்டணம் அதிக பட்சமாக வருடத்திற்கு 20000 ரூபாய் அல்லது முழு கட்டணம் (இரண்டில் குறைந்தது)
  2. IIT (சென்னை), NIT(திருச்சி), Indian Institute of Tech and Design Management(காஞ்சிபுரம்), National Institute of Fashion Technology ஆகிய கல்வி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கு முழு கல்வி உதவி வழங்கப்படும்
  3. 30% கல்வி உதவி பெண்களுக்கு வழங்கப்படும்
  4. விடுதி மற்றும் ஊக்க தொகைகள் வருடத்திற்கு 10000 வரை
  5. கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் முஸ்லிம் மாணவிகளுக்கு தங்கும் விடுதி மற்றும் உணவு இலவசம்
  6. ஒதுக்கப்பட்டுள்ள நிதி தொகை 8 கோடி

சமர்பிக்கப்பட வேண்டிய சான்றிதழ்கள் :
  • சாதி சான்றிதல் நகல் (Xerox)
  • பிற்படுத்தப்பட்டோர் என்பதற்கான சான்று (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
  • வருமான சான்றிதல் (அரசு அலுவலர்களிடமிருந்து பெறப்பட வேண்டும்)
  • உங்கள் மதிப்பெண் சான்றிதல் (Marksheet) நகல்களை (Xerox) இணைத்து அனுப்புவது சிறந்தது

சமர்பிக்கப்பட வேண்டிய கடைசி நாள்:

புதிதாக விண்ணப்பிபவர்களுக்கு ஆகஸ்ட் 10, 2010
புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 26, 2010

கூடுதல் தகவல்கள் :
  1. புதிதாக இந்த உதவியை விண்ணப்பிப்பவர்கள் இணைக்கப்பட்டுள்ள (MCM Appl Form) விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்
  2. ஏற்கனவே இந்த உதவியை பெற்றுகொண்டிருப்பவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை, புதுப்பித்தல் விண்ணப்பத்தை (MCM Renewal Claim) பூர்த்தி செய்து உங்கள் சலுகையை புதுப்பித்து கொள்ளலாம்
  3. பூர்த்தி செய்யப்பட விண்ணப்பத்தை உங்கள் கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் சமர்பிக்கவும், தாமதமாக சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த இணையதளத்தை பார்க்கவும்: http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm

நேர்முக தேர்வில் வெற்றி பெற தேவையான முக்கிய அம்சங்கள்



அரசு அல்லது தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளை பெற எழுத்துதேர்வு மட்டுமன்றி ஈன்டெர்விஎந் நேர்முக தேர்வு மற்றும் (Group Discussion) குழு விவாதம் ஆகியவற்றையும் சந்தித்தாக வேண்டும். வேலை வாய்ப்புகளுக்கு மட்டுமின்றி உயர் கல்வி படிப்பில் சேரவும் நேர்முக தேர்வு மற்றும் குழு விவாதம் தேவைபடுகிறது.

நவீன நிறுவனங்கள், தங்களது தேர்வு அமைப்பைப் பயன்படுத்தி தேவையான பணியாளர்களை தேர்வு செய்வது அல்லது இதற்கெனவே இருக்கும் தனியார் அமைப்புகளிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து விடுவது. இதில் எந்த முறையானாலும் தகுதியான, திறமையான பணியாளர்களை தேர்வு செய்ய கீழ்காணும் நான்கு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1. கல்வி தகுதி
2. எழுத்துத் தேர்வு
3. குழுவிவாதம்
4. நேர்முகத் தேர்வு

முதல் கட்டம்: விண்ணப்பதாரரின் கல்வி தகுதி, அவர் விண்ணப்பம் அனுப்பி இருக்கும் முறை, அதில் பயன் படுத்தியிருக்கும் வார்த்தைகள், கடித வாசகங்களை எழுதி இருக்கும் முறை, கல்வி தவிர முன் அனுபவம், மற்றும் பிற துறைகளில் இருக்கும் திறமை போன்றவைகளை அடிப்படையாக வைத்து அந்த நபரின் விண்ணப்பத்தை தேர்வு செய்வது.

இரண்டாவது கட்டமான எழுத்து தேர்வில் விண்ணப்பதாரின் கல்வித்திறன் சோதித்து அறியப்படுகிறது.

முன்றாவதாக குழுவிவாதம் மூலம் அந்த நபரின் அறிவுத்திறன், குழுவாக செயல்படும் திறன், சந்தர்ப்பச் சூழ்நிலைக்கு ஏற்ப பேசுதல் செயல்படுதல் போன்ற திறன்கள் மதிப்பிடப்படுகின்றன.

இறுதிக் கட்டமான நேர்முகத் தேர்வு விண்ணப்பதாரரின் பிற குணங்களை அறிய உதவுகிறது.

நேர்முகத்தேர்வின் போது பொதுவாக ஐந்து முக்கிய அம்சங்களை தேர்வாளர்கள் மதிப்பீடு செய்வார்கள். அவை 
1.தனித்திறமைகள் 
2. தலைமைப் பண்பு திறமை 
3.தொழில்நுட்பம், கல்வி மற்றும் பணித்திறன் 
4. பொது விஷயங்களில் ஆர்வம் 
5.தனிப்பட்ட குணாதிசயங்கள்

இந்த ஐந்து அம்சங்களும் நிறைந்தவரை தங்கள் நிறுவனத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதே தேர்வாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கும். இந்த குணங்களும் திறமைகளும் ஒருவருக்கு இருக்கிறதா என்பதை அவரிடம் கேள்விகள் கேட்பதன் மூலமும், பொதுவான விபரங்கள் குறித்து பேசுவதன் மூலமும்தான் அறிய முடியும். இந்த வழி முறையைப் பின்பற்றித்தான் ஒருவரிடம் என்ன திறமைகள் இருக்கின்றது என்பதை தேர்வாளர்கள் அறிந்து கொள்ள முயற்சி செய்வார்கள்.

எனவே அதற்கு ஏற்ப நேர்முக தேர்வில் கலந்து கொள்பவர்களும் செயல்பட்டு தங்களது அனைத்துத் திறமைகளையும் தேர்வாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் செயல் படுவது மிக அவசியம். கேள்விகளுக்கு சரியாக பதில் அளிப்பது மட்டுமே வெற்றியைத் தந்து விடாது, நமது உற்சாகமான மன நிலையும், கலகலப்பானப் பேச்சுத் திறமையும், நமது கண்ணியமான உடல் அசைவுகளும் நம்மைப் பற்றிய உயர்ந்த எண்ணத்தை தேர்வாளர்கள் மனதில் தேற்றுவிக்க வேண்டும். அப்போது தான் ஏராளமான போட்டியாளர்கள் மத்தியில் நாம் தனித்து தெரிவோம். இதன் மூலம் வெற்றியும் நம்மைத் தேடி வரும்.

இதயத்தை பாதுகாக்க யோசனைகள்



  1. மிதமான அளவு எப்போதும் உண்ணுங்கள். சற்று பசி இருக்கும் போதே உண்ணுவதை நிறுத்தி விட்டால் நலம்.
  2. உண்ணாமல் டயட்டில் இருப்பது உங்களை எரிச்சல் படுத்தவே செய்யும். சில நேரங்களில் டயட்டில் இருப்பது போதிய சத்து உடலில் சேராமல் தீங்கு விளைவிக்கும். 
  3. உடல் எடை குறைவு - சரியான உடற் பயிற்சி மூலம் தான் அடைய முடியும். குறிப்பாக எடை குறைவு நீண்ட நாள் நீடிக்க உடற் பயிற்சி அவசியம்.
  4. நீங்கள் விரும்பும் உணவு எதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டாம். அவற்றை குறைவாக, அவ்வபோது சாப்பிடுங்கள்.
  5. மீனில் சில நல்ல அமிலங்கள் இருப்பதால், மீன் சாப்பிடுவது நம் இதயத்துக்கு நல்லது.
  6. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுங்கள். ப்ரிட்ஜில் வைக்கப்படும் காய் - பழங்கள் 50 முதல் 60 % வரை சத்துக்களை இழக்கின்றன.
  7. பிரஷ் ஆக உள்ள காய் & பழங்கள் தினம் சாப்பிடுவது புற்று நோய் மற்றும் இருதய நோயிலிருந்து நம்மை காப்பாற்றும்.
  8. உபயோகபடுத்திய சமையல் எண்ணைகளை மீண்டும் உபயோகபடுதாதீர்கள்.
  9. புகை பிடிப்பதும் அதிக எடையுடன் இருப்பதும் இதயத்துக்கு அதிக தீங்கை விளைவிக்கும்.
  10. தக்காளி, வெங்காயம், பூண்டு, எலுமிச்சை, கேரட் ஆகியவை கொலஸ்ட்ரால் குறைக்க உதவும்.
  11. சாப்பிடும் நேரம் டென்சன் ஆகாமல் அமைதியாய் இருங்கள்.
  12. மிக சிறிய , உபயோகம் இல்லாத விஷயங்களால் தான் பெரும்பாலும் (90 %) நமக்கு மனச்சுமை (ஸ்ட்ரெச்ச்) வருகிறது.
  13. மனச்சுமை ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
  14. எல்லா விஷயங்களும் மிக சரியாக (Perfect) இருக்க வேண்டும் என எதிர் பார்க்காதீர்கள். நீங்கள் பெர்fஎcட் ஆன மனிதர் இல்லை என்பதை உணருங்கள். இது உங்கள் ரத்த அழுத்தம் மற்றும் மனச்சுமை குறைய உதவும். 
  15. சில வேலைகளை பிறரிடம் கொடுத்து செய்ய சொல்லுங்கள். 
  16. கோபம், வருத்தம், மகிழ்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளி காட்டி விடுங்கள். அவற்றை அடக்குவதன் மூலம் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகமாகும் என்பதை உணருங்கள்.
  17. அடிக்கடி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம். வேலையை விட்டு செல்பவர்களை விட, அவர்களை வேலையை விட்டு அனுப்பும் நபர் மனதளவில் அதிகம் பாதிக்கபடுகிறார் !
  18. குளிர் காலத்தில் ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் அதிகம்.
  19. உங்கள் படுக்கை அறையில் தொலை காட்சி, கணினி, வளர்ப்பு பிராணிகள் இவற்றை அனுமதிக்காதீர்கள். 
  20. உடல் எடை கூடுவதற்கு தொலை காட்சி ஒரு முக்கிய காரணம் ஆகும்
  21. உங்கள் அலை பேசியை உங்கள் பார்ட்னர் ஆக்கி கொள்ளாதீர்கள்; அது மோசமான பழக்கம்; மேலும் மனச்சுமையை கூட்டும்.
  22. மகிழ்ச்சியுடனும், பொறுமையுடனும் இருப்பவர்களை இதய நோய்கள் அதிகம் தொந்தரவு செய்வதில்லை. 
  23. சிரிப்பு (Laugh Therapy) புற்று நோய், இதய நோய், மன சுமை போன்றவற்றிலிருந்து விடுபட உதவுகிறது என அறிவியல் ரீதியாக நிரூபிக்க பட்டுள்ளது.
  24. தவறு செய்தால் அதனை ஒப்பு கொள்வது உங்கள் தன்னம்பிக்கையை அதிகபடுத்த உதவும்
  25. உங்கள் பிரச்சனைகளை முடிந்த வரை பேசி தீர்க்க பாருங்கள்.
  26. நேர் மறை எண்ணங்களையே மனதில் முடிந்த வரை கொள்ளுங்கள். நல்லதே நடக்கும் என (Optimist) நம்புங்கள்.
  27. மகிழ்வாக வாழும் கணவன்- மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வர வாய்ப்புகள் குறைவு. தனியே வாழ்வோருக்கு வாய்ப்புகள் அதிகம்.
  28. நம்பிக்கையும் நேர் மறை சிந்தனைகளுமே புற்று நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து மீள உதவும் 
  29. வருடத்திற்கு ஒரு முறை உடல் நல பரிசோதனை மிக மிக அவசியம்.
  30. பழைய நட்புகளை விடாது தொடருங்கள். புது நட்புகளும் உருவாக்கி கொள்ளுங்கள். நிறைய நண்பர்கள் இருந்தால் உங்கள் உடல் நலனும் நன்றாக இருக்கும்.


காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்



நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும். 

இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.

காரட்:
தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

முட்டைக்கோசு:
மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.

பீட்ரூட்:
ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.

இஞ்சி:
கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.

வெங்காயம்:
வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது. மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது. இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ஆப்பிள்:
இதில் உள்ள `பெக்டின்' என்ற நார்ச்சத்து இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பது ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.

அன்னாசி:
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் அன்னாசி சிறந்து விளங்குகிறது. மேலும், அன்னாசிப் பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தில் உறையும் தன்மை குறைவதோடு, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எலுமிச்சம்பழம்:
உடம்பிலுள்ள சிறிய இரத்தக் குழாய்களின் சுவர்களை எலுமிச்சையில் உள்ள சத்துக்கள் உறுதிப்படுத்துவதோடு சிறுநீரகங்களில் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. எலுமிச்சையில் `பெக்டின்' சத்து உள்ளதால் இரத்தத்திலுள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.

பூண்டு:
இதில் `சாலிசிலிக்' என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்' என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.

சுரைக்காய்:
இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.

வெள்ளரிக்காய்:
இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு. 

தர்ப்பூசணி:
இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது. 

முள்ளங்கி, வெண்டைக்காய்:
இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். 

எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்

நன்றி: http://muduvaihidayath.blogspot.com/

Saturday, 26 June 2010

புகைபிடிக்க சவூதி அரசு தடை விதித்துள்ளத்துள்ளது !



விமான நிலையங்களில் விமான நிலையங்களில் புகைபிடிக்க சவூதி அரசு தடை விதித்துள்ளது. மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. ஆய்வறிக்கையின்படி, அந்நாட்டில் 60 லட்சம் பேர் புகைபழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும், புகையிலை மற்றும் சிகரெட் நுகர்வில் சவூதி அரேபியா உலகிலேயே ஆறாவது இடத்தில் உள்ளது. 10 சதவீத பெண்கள் மற்றும் 19.3 சதவீத இளைஞர்கள் சிகரெட் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆண்டுக்கு 1.3 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் அங்கு இறக்குமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் புகைப்பழக்கம் தொடர்பான நோய்களால் 400 பேர் வரை இறப்பதாகவும் தெரியவந்துள்ளது.

புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கடந்த 2003ம் ஆண்டு அந்நாட்டு அரசு, கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இந்த கட்டுப்பாடுகளை புகைபிடிப்பவர்கள் கண்டுகொள்ளவில்லை. எனவே, பெருகி வரும் சிகரெட் பழக்கத்தை கட்டுப்படுத்த சவூதி அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. விமான நிலையங்களில் புகைபிடிக்க தடை விதிக்க வேண்டும் என்ற 150 உறுப்பினர்களை கொண்ட ஷுரா கவுன்சிலின் பரிந்துரைக்கு, அந்நாட்டு இளவரசர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், தடையை மீறி புகைபிடிப்பவர்களுக்கு விமான போக்குவரத்து ஆணையம் அபராதம் விதிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்

Thursday, 24 June 2010

வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள்!



குற்ற தடுப்பு நடவடிக்கைகள் சென்னை நகரில் குற்றங்களை தடுப்பதற்காக போலீஸ் கமிஷனர் சேகர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். பகல் நேரங்களில் வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் பல்வேறு அபாயங்களை சந்திக்க வேண்டியுள்ளது. யாராவது மர்ம ஆசாமிகள் வீடுகளில் புகுந்து தனியாக இருக்கும் பெண்களிடம் நகைகளை கொள்ளையடித்து சென்றுவிடுகிறார்கள்.

தனியாக இருக்கும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. நகை பாலிஷ் செய்வதாக சொல்லி தனியாக இருக்கும் பெண்களிடம் மோசடி கும்பல் நகைகளை அபகரித்து செல்லும் நிகழ்வுகளும் நடக்கின்றன. வீடுகளில் தனியாக இருக்கும் பெண்கள் தங்களை தாங்களே காப்பாற்றிக்கொள்ள கமிஷனர் சேகரின் அறிவுரைப்படி, சில ஆலோசனைகளை சென்னை நகர போலீசார் வெளியிட்டுள்ளனர். இது சென்னை நகருக்கு மட்டும்தானே என்று அலட்சியமாக இருந்துவிடாமல் நாமும் சற்று எச்சிரிக்கையாக இருப்பது நல்லதுதானே!

போலீசார் வழங்கியுள்ள 12 அறிவுரைகள்:

1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.

2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக `லென்ஸ்’ பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.

3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம் வீட்டில் தனியாக இருக்கும் விஷயத்தையும் சொல்லாதீர்கள். தங்கள் கணவர்கள் எப்போது அலுவலகம் செல்வார்கள், எப்போது வீடு திரும்புவார்கள் என்பன போன்ற விஷயங்களையும், கணவர் வெளியூர் செல்லும் விஷயங்களையும் புதிதாக பழகுபவர்களிடம் பெண்கள் சொல்லக்கூடாது.

4. தற்காப்பு கலை: வீடுகளில் தனியாக இருக்கும் இளம் பெண்கள் தற்காப்பு கலைகளான கராத்தே போன்ற கலைகளை கற்றுக்கொண்டால் நல்லது. திடீரென்று கொள்ளையர்களாக மாறும் நண்பர்களை சாதுர்யமாக சமாளிக்க வேண்டும். நகைகளை கொடுக்கமாட்டேன் என்று சத்தம் போட்டு ஆபத்தை வரவழைப்பதைவிட, கொள்ளையர்களிடம் புத்திசாலித்தனமாக பேசி அவர்களை வீட்டிற்குள் தள்ளி கதவை பூட்டிவிடலாம். அல்லது மிளகாய் பொடி போன்ற பொருளை கொள்ளையர்களின் கண்ணில் தூவி சமாளிக்கலாம்.

5. அறிமுகம் இல்லாத நபர்களையோ, அல்லது ஓரளவு தெரிந்த நபர்களையோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வீட்டிற்குள் அனுமதிக்க நேர்ந்தால் அவர்கள் குடிநீர் கேட்டால் கொடுக்காதீர்கள். அவர்கள் எதற்காக வந்தார்களோ அந்த விஷயத்தை மட்டும் பேசிவிட்டு உடனடியாக வெளியே அனுப்பி விடுங்கள்.

6. வீட்டு வேலைக்காரர்கள், கார் டிரைவர்கள், சமையல்காரர்களை நியமிக்கும்போது அவர்களின் பெயர் உள்பட முழு விவரங்களையும் சேகரிக்க வேண்டும். அவர்களுடைய புகைப்படம் மற்றும் கைரேகையை எடுத்து வைப்பதும் நல்லது. கைரேகையை எடுத்து வைத்தால் திருடும் எண்ணமுள்ள வேலைக்காரர்கள் கூட பயந்து போய் திருடமாட்டார்கள்.

7. முதியவர்கள் : வீடுகளில் வயதான பெண்கள் தனியாக இருக்கும் நிலை ஏற்பட்டால் பணம் மற்றும் நகைகளை வங்கி லாக்கரில் கண்டிப்பாக வைக்க வேண்டும். யாராவது மர்ம நபர்கள் புகுந்து வயதான பெண்களை எளிதில் ஏமாற்றி நகை மற்றும் பணத்தை எடுத்து செல்வதை இதன் மூலம் தடுக்கலாம்.

8. அடுக்குமாடிகள் மற்றும் பங்களா போன்ற வீடுகளில் வசிக்கும் பெண்கள் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் நட்போடு பழக்கம் வைத்துக்கொண்டால் ஆபத்து நேரங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் உதவி செய்ய வாய்ப்பாக இருக்கும்.

9. ஜோதிடர்கள் : ஜோதிடர்கள், குறி சொல்பவர்கள், போலி சாமியார்கள், நகை பாலிஷ் போடுபவர்கள், பழைய பொருட்கள் வாங்குபவர்கள் போன்ற நபர்களை, தனியாக இருக்கும் பெண்கள் தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்க கூடாது. பால்காரர், பேப்பர்காரர், காய்கறி விற்பவர், கேபிள் டி.வி. ஆபரேட்டர், சமையல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவர், சலவைகாரர் போன்றவர்களின் பெயர்கள், அவர்களது முகவரி போன்றவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அவர்களை பெரும்பாலும் வீட்டிற்குள் அனுமதிக்காமல் இருப்பது நல்லது. வெளியில் வைத்தே காரியத்தை முடித்துவிட்டு, அவர்களை அனுப்பிவிடுவது சால சிறந்தது.

10. டெலிபோன் எண்கள் : அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக இருக்கும் பெண்களை, பார்வையாளர்கள் யாராவது பார்க்க வந்தால், அவர்களை காவலாளிகள் நன்கு விசாரிக்க வேண்டும். அந்த பார்வையாளர்களின் பெயர், முகவரி போன்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் வந்திருக்கிறார்கள் என்ற விஷயத்தை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தகவல் சொல்லி அவர்கள் அனுமதித்தால் மட்டுமே பார்வையாளர்களை வீட்டுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

11. ஒவ்வொரு வீட்டிலும் அருகிலுள்ள போலீஸ் நிலைய தொலைபேசி எண், தீயணைப்புத்துறை டெலிபோன் எண், அவசர போலீஸ் தொலைபேசி எண், அல்லது தங்களுக்கு தெரிந்த போலீஸ் துறையில் பணிபுரியும் அதிகாரிகளின் தொலைபேசி எண் போன்றவற்றை ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கலாம். அல்லது டெலிபோன் எண்களை ஒரு பேப்பரில் எழுதி சுவரில் ஒட்டி வைத்திருக்கலாம். ஆபத்து காலங்களில் இந்த டெலிபோன் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு உதவி கேட்பதற்கு வசதியாக இருக்கும்.

இதுபோன்று காவல்துறையினரின் மற்ற அறிவிப்புகளை டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும் download

Wednesday, 23 June 2010

மாணவச்செல்வங்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது

கடந்த எட்டு வருடங்களாக நமது நீடூர் - நெய்வாசல் துபை சங்கத்தினரால் நமதூர் அரசு பள்ளியில் பயின்றுவரும் மாணவ மாணவிகளுக்கு  வழங்கப்பட்டுவரும் இலவச நோட்டு புத்தகங்கள் இவ்வாண்டும் 18.06.2010  அன்று சிறப்பாக வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உடலாலும் உள்ளத்தாலும் நிதியாலும் உதவி வழங்கிய அனைத்து நல்லுங்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக.



























































Tuesday, 22 June 2010

இறப்புச்செய்தி

ரைஸ்மில்தெரு M.ஹஜ்ஜி முஹம்மது அவர்களின் தந்தையார் O.முஹம்மது ஃபாரூக் அவர்கள் இன்று (22.06.2010) இறந்துவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

Sunday, 20 June 2010

மார்பக புற்றுநோய் சில எச்சரிக்கைகள்!



நீங்கள் 35 வயதை தாண்டிய பெண்ணாஅப்படியானால் மார்பகங்களை அவ்வப்போது சுய பாரிசோதனை செய்து கொள்ளுங்கள். வழக்கத்துக்கு மாறான கட்டிகள்அல்லது வேறுமாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக மருத்துவாரிடம் செல்லுங்கள். ஏனெனில் அது உயிருக்கு உலை வைக்கும் மார்பக புற்றுநோயாக கூட இருக்கலாம். ரொம்ப பயப்படாதீங்க... மார்பக புற்றுநோயைப் பற்றி விலாவாரியாக தொரிஞ்சுகோங்க..



மார்பக புற்றுநோய் என்றால் என்ன



மார்பக திசுக்களில் ஆபத்தான செல்கள் உண்டாவதைத் தான் மார்பக புற்றுநோய் என்று சொல்கிறேhம். மனித உடம்புபலதரப்பட்ட செல்களால் ஆனது. உடம்பின் தேவைக்கு தகுந்தபடி இந்த செல்கள் அவ்வப்போது பிhரிந்துகூடுதலான செல்களை உருவாக்கும். இது இயல்பான விஷயம். சில நேரம் குறிப்பிட்ட பகுதியில் செல்கள் வழக்கத்துக்கு விரோதமாக பல்கி பெருகி ஒன்றh திரளும். இது கட்டி என்று குறிப்பிடப்படுகிறது. புற்றுநோயின் ஆரம்பமும் இதுதான். 



மார்பக புற்றுநோய் கட்டிகள்மார்பக திசுக்களில் தொடங்கி பரவும். மற்ற புற்றுநோய்களை மாதிரி இதுவும் உடம்பின் பிற உறுப்புக்களிலும் பரவி ஆபத்தானகட்டிகளை உண்டாக்கும். பெண்ணாக பிறந்த ஒவ்வொருவருக்கும் மார்பக புற்றுநோய் ஆபத்து இருக்கிறது. வயது மற்றும் வாய்ப்புக்களை பொறுத்து ஆபத்து அதிகாரிக்கும்.
பொதுவானது எப்படி



உலகில் ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகில் இது சகஜமான நோயாகி விட்டது. இருப்பினும் மேற்கத்திய உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை மோகம் அதிகாரித்து வருவதால் நம்ம இந்தியா உள்பட.. உலகின் பல நாடுகளிலும் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை படு ஸ்பீடாக அதிகாரித்து வருகிறது. இங்கு ஆண்டுதோறும் 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்;பக புற்றுநோய் கண்டுபிடிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் மும்பைடெல்லி போன்ற பெருநகரங்கள் நிலை மோசம். இதுபோல அருகில் உள்ள கேரளாவிலும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.ஒட்டுமொத்தமாக பார்த்தால் நகர்ப்புறங்களில் மார்பக புற்றுநோய் பரவலான ஒன்றhகி வருகிறது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் பேர் புற்றுநோய் தொடர்பான விஷயங்களால் பாதி;க்கப்படுகின்றனர். இதில் மார்பக புற்றுநோய் தான் ஜாஸ்தி.
ஆபத்தான காரணிகள்: 



வயது - நீங்கள் வயதான பெண்மணியாக இருந்தால் மார்பக புற்றுநோய் ஆபத்து அதிகம். பெதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களிடம்தான் இந்நோய் சகஜமாக உள்ளது. இதில் சராசாரி வயது 63 ஆகும். 


பூப்பெய்துதல் - பருவம் அடையும் வயதுக்கும்மார்பக புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது சற்று தாமதமாக பூப்பெய்தும் பெண்ணைக் காட்டிலும் 12 வயதிலேயே பருவத்துக்கு வரும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து மிக அதிகம். இதற்கு ஈஸ்ட்ரோஜன் ஹhர்மோன்கள் தான் காரணம். சின்ன வயதிலேயே வயதுக்கு வரும் பெண்களுக்கு,மாத விலக்கு எண்ணிக்கை அதிகம். இத்தகைய சூழலில் ஈஸ்ட்ரோஜன் நீண்ட காலத்துக்கு வெளிப்படுவதால் புற்றுநோய் ஆபத்தும் அதிகாரிக்கிறது. 



குழந்தை பெறுதல் - பெண்கள் 25 முதல் 30 வயதுக்குள் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும். 30 வயதை தாண்டி முதல் குழந்தையை பெற்றுக் கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஆபத்து முதல் மடங்கு அதிகம். அதே சமயம் குழந்தையே பெற்றுக் கொள்ளாமல் காலம் தள்ளுவதும்ஆபத்தை இன்னும் அதிகாரிக்கும். 



குடும்ப பாரம்பாரியம் - தனிப்பட்ட முறையில் மார்பகங்கள் சம்பந்தமான நோய்களால் (புற்று அல்லாத) அவதிப்படும் பெண்களுக்குஅந்த குறிப்பிட்ட மார்பகத்திலோ அல்லது வேறு மார்பகத்திலோ புற்றுநோய் வரக் கூடும். 



ஹார்மோன் 
சிகிச்சை - மெனோபாஸ் தாக்கத்தை குறைப்பதற்காக இன்று ஹார்மோன் சிகிச்சை எடுத்துக் கொள்வது சகஜமாகி வருகிறது. இந்த சிகிச்சையில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஸ்ஜெஸ்டீரான் கலந்து சிகிச்சை அளிக்கிறhர்கள். இது மார்பகபுற்றுநோய் ஆபத்தை 26 சதவீதம் அதிகாரிக்கும். 



சில குடும்பத்தில் பெண்களுக்குசின்ன வயதிலேயே மார்பக புற்றுநோய் அல்லது கருப்பை புற்றுநோய் காணப்படும். இதற்கு மேற்படி மரபணுக்கள் தான் காரணம். மரபியல் ரீதியான வேறு சில காரணங்களாலும் மார்பக புற்றுநோய் வரலாம். 



மதுபானம் - மது பழக்கமே இல்லாத பெண்களுடன் ஒப்பிடும் போதுதண்ணி அடிக்கும் பெண்களுக்கு புற்றுநோய் ஆபத்து சற்று அதிகம். 



உணவு மற்றும் உடற்பயிற்சி - கொழுப்புச் சத்துக் குறைந்த உணவுகள் மற்றும் ரெகுலரான உடற்பயிற்சி ஆகியவற்றைபின்பற்றும் பெண்கள் புற்றுநோய் ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.
கண்டுபிடிப்பது எப்படி? 



மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிப்பது மிகவும் முக்கியமானது. இதற்கு சுய பாரிசோதனை செய்து கொள்ளலாம் அல்லது உhரிய மருத்துவாரிடம் சென்று மேமோகிராம்பாரிசோதனை செய்து கொள்ளலாம். சுய பாரிசோதனை செய்யும் முன் மார்பகத்தில் வழக்கமாக நடக்கும் மாற்றங்கள் பற்றி நன்றhக தொரிந்திருக்க வேண்டும். இதன்மூலம் சாதாரண மாற்றங்களை கூட புற்றுநோய் என எடுத்துக் கொள்வது தவிர்க்கப்படும். 



மார்பக சுய பாரிசோதனையை பொறுத்தமட்டில் மாதந்தோறும் ஒரே தேதியில் செய்ய வேண்டும். மாத விலக்கான முதல் நாட்கள் கழித்து பாரிசோதனை செய்யலாம். ஒருவேளை மாத விலக்கு நின்றிருக்குமானால் கட்டாயம் மாதந்தோறும் அதே நாளில் செய்ய வேண்டும். சுய பாரிசோதனை மூலம் மார்பகத்தில் வழக்கத்துக்கு மாறhன மாற்றம் - அறிகுறி தென்பட்டால் அதை உடனே கண்டுபிடிக்க முடியும்.
அறிகுறிகள் 



பெரும்பாலும் வலியில்லாமல் காணப்படும் கட்டிகள் தான் இதன்அறிகுறியாக உள்ளது. மற்ற அறிகுறிகள் வருமாறு 


1. மார்பகங்கள் அல்லது அக்குளில் புதிய அல்லது வழக்கத்துக்கு மாறான கட்டிஅல்லது தடித்து இருத்தல் 


2. மார்பகத்தின் அளவு மற்றும் வடிவத்தில் மாற்றம் 


3. மார்பக தோலில் சிவப்பு தடுப்புகள் போல தொரிவது 


4. மார்பு காம்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வடிதல் 


5. மார்பு காம்புகள் உள்ளிழுத்துக் கொள்வது 


6. மார்பகங்களில் வலி 



பாரிசோதனைகள் 



மேற்குறிப்பிட்டதைப் போல ஏதாவது மாற்றங்கள் தொரியுமானால் உடனடியாக மருத்துவாரிடம் செல்லுங்கள். அவர் மேமோகிராம் அல்லது அல்ட்ராசவுண்ட் பாரிசோதனைகளைசெய்வார். ஒருவேளை புற்றுநோய் இருப்பதாக சந்தேகம் வந்தால்,குறிப்பிட்ட இடத்தில் ஊசியை செலுத்திசிறிதளவு திசுக்களை சேகாரித்து பயாப்ஸி டெஸ்டுக்கு அனுப்புவார். சில சமயம் சந்தேகத்திற்குhரிய பகுதியை முழுவதும் அகற்ற வேண்டியிருக்கும். 



பயாப்ஸி சோதனையில்குறிப்பிட்ட திசுக்களை மைக்ரோஸ்கோப்புக்கு அடியில் வைத்து சோதனை செய்வர். அப்போது புற்றுநோய் செல்கள் இருக்கிறதாஎன்பதுகண்டறியப்படும். 



மார்பக புற்றுநோயை பொறுத்தமட்டில் சிகிச்சை முறைகள்வேறுபடும். அதுபோல புற்றுநோய் என்ன கட்டத்தில் இருக்கிறது என்பதை பொறுத்துதான் நோயாளி குணமடைவார். ஏனெனில் மார்பகங்களை தாக்கிய புற்றுநோய் வேறு உறுப்புகளுக்கும் பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. இதுதவிர என்ன மாதிhரியான புற்றுநோய் தாக்கியுள்ளது?புற்றுநோய்கள் செல்கள் என் ரகம்இன்னொரு மார்பகத்திலும் பரவி இருக்கிறதாஎன்பது போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை காண வேண்டும். இதுபோக சம்பந்தப்பட்ட பெண்ணின்வயதுஅவருக்கு மாத விலக்கு நின்றிருக்கிறதாஅல்லது இன்னமும் மாத விலக்காகிறவராஎந்த மாதிhரியான சிகிச்சையை அவரது உடம்பு ஏற்றுக் கொள்ளும் உள்ளிட்ட பல விஷயங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். இதையெல்லாம் சாரி பார்த்த பிறகேசிகிச்சை பற்றி மருத்துவர்கள் முடிவு செய்வார்கள்.
நீங்கள் என்ன செய்யலாம்



நோய்கள் ஏற்படுவதற்கு பல காரண- காரியங்கள் உள்ளன.இவையெல்லாம் நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவை. இருப்பினும் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைத்துக் கொள்வதற்கு பெண்களுக்கு பல வழிகள் உள்ளன. இதில் ஆரோக்கியமானவாழ்க்கை முறை குறிப்பிடத்தக்கது ஆகும். 


1. ரெகுலரான உடற்பயிற்சிசத்தான உணவுமதுவை தவிர்ப்பது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 


2. மேமோகிராம் சோதனை மூலம் மார்பக புற்றுநோயயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க முடியும். பொதுவாக 40 வயதை தாண்டிய பெண்கள் வருடந்தோறும் மேமோகிராம் டெஸ்ட் எடுக்க வேண்டும் என்று அமொரிக்க கேன்சர் சொசைட்டி கூறுகிறது. 50 வயதுக்கு மேல் இந்த டெஸ்ட்டை செய்து கொண்டால் கூடஉயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு 30 சதவீதம் உள்ளது. டாமோக்ஸிபென் என்று ஒரு மருந்து தற்போது கிடைக்கிறது. இந்த மருந்து மார்பு புற்றுநோய் தீவிரத்தை 50சதவீதம் குறைக்கும். 


3. அடுத்து மார்பக புற்றுநோய்க்கான காரணிகள் பற்றி ஒவ்வொரு பெண்ணும் தொரிந்து வைத்திருக்க வேண்டும். இதன்மூலம் ஒருவேளை புற்றுநோய் வந்தால் அதை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியும். 


4. நம் ஊரில் மார்பக புற்றுநோயை கண்டுபிடிக்க பரவலாக எந்தவொரு திட்டமும் இல்லை. இருந்தாலும் மேமோகிராம் பாரிசோதனையை முறை பாரிசீலிக்கலாம். நம் நாட்டைப்பொறுத்தவரை மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக வருபவர்களில், 50 சதவீதம் பேர் நோய் கடுமையாக முற்றிய நிலையில் தான் வருகிறhர்கள். இதனால் மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போகிறது. 


5. மார்பு புற்றுநோய் எவ்வளவு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கிறேhமோ,அந்தளவுக்கு சம்பந்தப்பட்ட பெண்ணை காப்பாற்ற முடியும். ஏனெனில் ஆரம்ப கட்ட புற்றுநோய்க்கு மட்டுந்தான் சிகிச்சைகள் உள்ளன. மாதந்தோறும் சுய மார்பக பாரிசோதனை செய்து கொள்வது சிறந்த முறை ஆகும்.
சுருக்கமான பயோடேட்டா 



1. மார்பக புற்றுநோய் பெண்கள் மத்தியில் பரவலாக காணப்படும் நோய். பெண்களின் உயிரைப் பறிக்கும் நோய்களில் இது 2-வது இடம் வகிக்கிறது. 



2. மகப்பேறு சம்பந்தமான நோய்களைக் காட்டிலும் மார்பகபுற்றுநோய் மடங்கு அதிகமாக காணப்படுகிறது. 



3. மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை சீராக அதிகாரித்து வருகிறது. 1960ம் ஆண்டில் 20-ல் ஒரு பெண்ணுக்கு தான் இப்புற்றுநோய் வந்தது. ஆனால் தற்போது 7-ல் ஒருவருக்கு இந்நோய் வருவதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. 



4. 65 வயதை தாண்டிய பெண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்நோய் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. 



5. செல்களின் எண்ணிக்கைகட்டிகள் ஆகியவற்றைப் பொறுத்து பெண்ணுக்குப் பெண் வேறுபடும். 



6. மார்பு புற்றுநோய் பெண்களுக்கு மட்டுமே வரும் என்று யாரும் நினைக்க வேண்டாம். ஏனெனில் ஆண்களுக்கும் வரலாம். ஆனால் அது மிகவும் குறைவு. (100:1 என்ற விகிதத்தில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.) 



7. ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விட்டால்உங்களின் வாழ்நாளை அதிகாரிக்க முடியும். 



8. மாதந்தோறும் அவசியம் சுய பாரிசோதனை செய்ய வேண்டும். 



9. நீங்கள் 40 வயதை தாண்டி இருக்கலாம். அல்லது புற்றுநோய் ஆபத்து அதிகமாக இருக்கலாம். இத்தகைய நிலையில் வருடந்தோறும் மேமோகிராம் சோதனையை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும்