சிந்திக்க சில வசனம்: (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது. அல் குர்ஆன் - 7:56!



சிந்திக்க சில பொன்மொழிகள்: 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல்: புகாரி



Tuesday, 14 May 2013

சிறு பங்களிப்பு! (இன்ஷா அல்லாஹ்) பெரும் பலன்!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 

சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நம் சங்க உறுப்பினர்களின் புகைப்படம்.  அன்று இருந்த கூட்டு பங்களிப்பு இன்று இல்லை! அன்று இருந்த எண்ணிக்கை இன்று இல்லை!




இன்றைய காலகட்டம் மட்டுமின்றி என்றும் எப்பொழுதும் முஸ்லிம்களுக்கும்கிடையில் முக்கியத்தேவை ஒற்றுமை, கூட்டு பங்களிப்பு, சகோதரத்துவம். தான் விரும்பியதையே தன்னுடைய சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்றும், ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் உடலின் பாகங்கள் போன்றவர்கள் என்றும் நமது உத்தம தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு தெளிவாக கூறி இருக்கிறார்கள்.

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி)அறிவித்தார்.

(நூல்: புகாரி)

சகோதரத்துவம், ஒற்றுமை, உதவி, சேவை, அர்பணிப்பு போன்ற உன்னத நோக்கத்துடன் நமதூரைச்சேர்ந்த நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உழைப்பாலும், முயற்சியாலும் 03.12.1993 ஆண்டு நமதூர் பெரிய பள்ளிவாசல் முன்னாள் இமாம் B.M. ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் துபாய் வந்தபோது நீடூர் நெய்வாசல் அஸோஸியேஸன் -துபாய் என்ற சங்கம் இனிதே ஆரம்பிக்கப்பட்டது.

இந்த துபாய் சங்கத்தின் மூலமாக நமதூரில் உள்ள ஏழமையில் வாழ்ந்த சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவிகளும், திருமணம் உதவிகளும், கல்வியை தொடர சிரமப்பட்டவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளும், இலவச பாட நூல்களும், அமீரகத்தில் வாழும் சகோதரர்களிடமிருந்து பித்ரா தொகைகள் ஒன்றினைக்கப்பட்டு அதனை ஊரில் வாழும் ஏழை எளிய சகோதர சகோதரிகளுக்கும் பகிந்தளிப்பதும், இன்னும் எத்தனை எத்தனையோ உதவிகளையும் இன்றளவும் சிறப்பாக செய்து வருவதை அனைவரும் அறிவோம்.

நூற்றுக்கணக்கான நமதூரைச்சார்ந்த சகோதரர்கள் அமீரகத்தில் வசித்துவருகிறோம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையில் மாதாந்திர ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதும், நமதூரின் முன்னேற்றத்திற்கு நம்மால் இயன்ற பணிகள் பற்றியும், ஏழ்மையில் வசிக்கும் நமதூரைச்சேர்ந்த சகோதர சகோதரிகளின் துயர் துடைக்க நம்மால் இயன்ற பணிகள் பற்றியும் ஆலோசனை செய்கிறோம். 

Monday, 13 May 2013

சகோதரத்துவம் ஈமானின் அடிப்படை!



ஒரு முஸ்லிமுக்கும் அடுத்த முஸ்லிமுக்குமிடையிலான தொடர்பு சகோத ரத்துவமாகத்தான் இருக்க முடியும் எனக் கருதும் இஸ்லாம் அவ்வுணர் வின்றி வாழ்வதனை பெரும்பாவமாகவும் ஈமான் கொள்வதற்கு தடையான அம்சமாகவும் குறிப்பிடுகின்றது. இதுபற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும்போது “என் உயிரைத் தன்கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! ஈமான்கொள்ளும் வரை கொள்ளும் வரை நீங்கள் சுவர்க்கத்தில் நுழைய மாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பரஸ்பரம், அன்பு கொள்ளும்வரை ஈமான் கொண்டவராக மாட்டீர்கள்.” (முஸ்லிம்)

எனவே, ஒருமுஸ்லிம் அடுத்த முஸ்லிமை நேசிக்க வேண்டும், அல்லாஹ்வுக்காக பரஸ்பரம், அன்பு கொள்ள வேண்டும். இறை நம்பிக்கையின் சுவையை அடைவதற்கான மூன்று பண்புகளில் ஒன்றாக அல்லாஹ்வுக்காக மட்டுமே ஒருவரை விரும்புவதனையும் நபியவர்கள் குறிப்பிட்டார்கள்.

சகோதரத்துவம் மனிதனின் இயல்பான உணர்வாகும். ஏனெனில், மனிதன் இயல்பிலேயே தனித்து வாழ முடியாதவனாகவும் பிறரைச் சார்ந்திருக்கும் பண்பு கொண்டவனாகவும் படைக்கப்பட்டிருப்பதனால் தனது தேவைகளை நிறைவேற்ற பிறரை நாடிச் செல்கின்றான். தனது இன்ப, துன்பங்களில் ஏனையோர்களையும் இணைத்துக் கொள்ள விரும்புகின்றான். இதனால் குடும்பமாக, சமூகமாக வாழ தலைப்பட்டுள்ளான்.

இத்தகைய இயல்பான வாழ்க்கை முறைக்கு மாற்றமாக நடந்து கொள்வது ஈமான் கொள்வதற்கு தடையாகவும் நரகிற்கு இட்டுச் செல்லும் வழிமுறையாகவுமே இருக்க முடியும்.

இஸ்லாமிய சகோதரத்துவம் இவ்வுலகில் மட்டுமல்லாது நாளை மறுமையிலும் வெற்றியையும் சுபீட்சத்தையும் பெற்றுத் தருவதாக இஸ்லாம் கூறுகின்றது. மறுமை நாளில் பரந்துவிரிந்த மஹ்ஷர் வெளியில் சூரியன் தலைக்கு மேல் கொண்டுவந்து வைக்கப்படும். அந்நேரத்தில் ஏழு கூட்டத்தினருக்கு மாத்திரம் அல்லாஹ்வுடைய நிழல் வழங்கப்படும். அதில் ஒரு கூட்டம் தான் அல்லாஹ்வுக்காக நேசித்து அவனுக்காக தோழமை கொண்டு அவனது பாதையில் பிரிந்துபோன இரு சகோதரர்களாகும்.

Saturday, 11 May 2013

பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூண்று இடம் பிடிக்கும் மாணவச்செல்வங்களுக்கு சிறப்புப்பரிசு!



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...) 

நமதூரின் முன்னேற்றத்திற்காகவும், நமது இஸ்லாமிய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காகவும் நமது துபாய் சங்கமானது பல்வேறு ஆக்கப்பூர்வ பணிகளையும், சேவைகளையும் செய்துவருவதை அனைவரும் நன்கு அறிவோம். கல்வி தொடர்பாகவும் பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் செய்துவருவதின் தொடர்ச்சியாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் முதல் மூண்று இடம் பிடிக்கும் நமதூரைச்சார்ந்த இஸ்லாமிய மாணவச்செல்வங்களுக்கு சிறப்பு பரிசினை வழங்கி வருகிறோம்.

அதன் தொடர்ச்சியாக கடந்து முடிந்த கல்வி ஆண்டிலும் (2012 - 2013) இறுதித்தேர்வில் பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதல் மூண்று இடம் பிடிக்கும் மாணவ / மாணவிகளுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

முதல் பரிசு
ரூபாய் 2,500 / -
இரண்டாம் பரிசு
ரூபாய் 2,000 / -
மூண்றாம் பரிசு
ரூபாய் 1,500 / -

தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் முதல் மூண்று இடம் பிடிக்கும் மாணவர் / மாணவிகள் அதற்கான மதிப்பெண் பட்டியலை எமது நிர்வாகிகளிடம் சமர்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இமெயில்: nidurneivasal@gmail.com

சங்கத்தின் மாதாந்திர கூட்டம் நேற்று (10.05.2013) நடைப்பெற்றது!






Monday, 6 May 2013

அண்டை வீடும் அண்டை நாடும்!

கடந்த 03.05.2013 வெள்ளிக்கிழமை அன்று சென்னை மக்கா மஸ்ஜிதில் "அண்டை வீடும் அண்டை நாடும்" என்ற தலைப்பில் சம்சுதீன் காசிமி அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ உரை. 





Sunday, 5 May 2013

இந்திய சிவில் சர்வீஸ் - 31 முஸ்லிம்கள் தேர்வு!


2012-ஆம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று (03.05.2013) அறிவிக்கப்பட்டுள்ளன. ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற பொறுப்புகளுக்கான இத்தேர்வில் 998 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 31 பேர் முஸ்லிம்களாவர். இதில் நான்கு முஸ்லிம்கள் முதல் நூறு இடங்களுக்குள் வந்துள்ளனர். ஒரு காலத்தில் இந்த தேர்வில் முஸ்லிம்கள் தேர்ச்சி பெறுவதே அரிது என்ற நிலை தற்போது சிறிது சிறிதாக மாறிவருவது மகிழ்ச்சியை தந்தாலும், இந்த தேர்வில் முஸ்லிம்கள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகமாக இருக்கின்றது என்பதையும் பதிவு செய்ய வேண்டியிருக்கின்றது. இந்த தேர்வு குறித்தான விழிப்புணர்ச்சியையும், வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளையும் மேலும் அதிகரிக்க முஸ்லிம்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும். 

வெற்றி பெற்றவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

கடந்த வருடமும் மொத்தம் 920 நபர்களில், இதே எண்ணிக்கையான 31 இஸ்லாமியர்கள் வெற்றிப்பெற்றிருந்தனர். 

ஒட்டுமொத்த இந்தியாவில் 2010ன் படி சுமார் 4790 IAS அதிகாரிகளில் சுமார் 108 இஸ்லாமியர்களும், 3209 IPS அதிகாரிகளில் சுமார் 109 அதிகாரிகள் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வெற்றியாளர்களின் விபரம்....

Tuesday, 30 April 2013

குர்ஆன் ஓர் அற்புதம்!



திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத வேதம் இது ஒன்றே என்று சிலர் பாராட்டுகின்றார்கள். குர்ஆனின் ஓசை நயமே ஒரு அற்புதம் என்கின்றனர் சிலர்.

குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போய்விட்டன. மூலமொழியில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே வேதம் திருமறைதான். இதுவல்லவா அற்புதம் என்று சிலர் வியக்கின்றனர். பெருவாரியான மக்களால் மனனம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்பதை ஒரு அற்புதமாக பேசுகின்றனர் சிலர். எல்லா நாடுகளிலும், எல்லாமொழி பேசும் மக்கள் மத்தியிலும் அதன் மூல மொழியில் ஓதப்படுகின்ற ஒரு வேதம் திருகுர்ஆனல்லவா என்று கேட்கின்றர் சிலர்.

உலகில் இரவிலும், பகலிலும் ஒவ்வொரு நாளிலும் அதிகமான மக்களால், அதிகமாக ஓதப்படுகின்ற வேதம் அது ஒன்றே என்கின்றனர் சிலர். கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாத, தூய்மையான கண்ணியமான வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்று புலகாங்கிதம் அடைகின்றனர் சிலர். இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் திருகுர்ஆனை உண்மைபடுத்துகின்றனவே என்று மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர் சிலர்.

ஒரு அருமையான ஆரோக்கியமான அரசியல் சிந்தாந்தம் அல்லவா திருகுர்ஆன் என்று அரசியல் விற்பன்னர்கள் ஆச்சரியபப்படுகின்றனர். எத்தனை இஸங்கள் வந்தாலும் குர்ஆனிஸத்தை வெல்ல முடியவில்லையே என்று பெருமிதம் கொள்கின்றனர் சிலர்.

Monday, 29 April 2013

இன்றைய போலிக்கடிதங்களும்! அன்றைய போலிக்கடிதங்களும்!


“மூஃமின்களே (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாலங்கள் இருக்கும் (பிறர் குறைகளை) நீங்கள் துருவி, துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரை பற்றி புறம் பேச வேண்டாம். உங்களில் எவராவது இறந்த தம்முடைய சகோதரனின் மாமிசத்தை புசிக்க விரும்புவாரா? (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன். மிக்க கிருபை செய்பவன். (49:12)”

பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய அழகிய சமுதாயம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றுதான் யூதர்களால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ஷியா - சன்னி என்ற பிரச்சனை. ஷியா - சன்னி என்ற சூழல் உருவாக்கியதில் யூதர்கள் பல்வேறு உக்த்திகளை கையாண்டார்கள். அதில் முதன்மையான சூழ்ச்சியோடு இன்று நமதூரில் அரங்கேறிக்கொண்டிருக்கும் மொட்டைக்கடிதாசி கலாச்சாரத்தினை ஒப்பிட்டு பார்த்தால் ஒரு உண்மை புலப்படும். ஏனெனில் அன்று யூதர்கள் செய்த சூழ்ச்சியின் நோக்கமும் தாக்கமும், இன்று மொட்டைகடிதாசி என்ற போர்வையில் சிலர் செய்யும் செயல்களின் நோக்கமும் தாக்கமும் ஒன்றுதான். ஆம், அதுதான் குழப்பமும், பிரிவினையும். 

அன்று யூதர்கள் அரங்கேற்றிய சூழ்ச்சியிகளில் பலவற்றில் ஒன்றுதான் மொட்டைக்கடிதாசிகள். ஹஜ்ரத் உமர் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்பட்டு ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் கலிபா பொருப்பிற்கு வந்த பிறகு அப்துல்லாஹ் இப்னு ஸபா என்ற யூதன் இஸ்லாமியர்களிடையே பல்வேறு குழப்பங்களை விளைவித்தான். அதில் அவன் கையாண்ட ஒரு விதம்  இல்லாத பெயர்களிலும், உத்தம ஸஹாபாக்களின் பெயர்களிலும் போலியாக பல்வேறு கடிதங்களை பரப்புவதுதான் அவன் கையாண்ட முக்கியமான தந்திரம். 

இஸ்லாமிய ஆட்சியில் கீழ் பல்வேறு பகுதிகளில் ஆளுனர்களாக இருந்தவர்களுக்கும், முக்கிய ஸஹாபாக்களுக்கும் கலிபா அவர்களுக்கு எதிராக பல்வேறு அவதூறுகளை பரப்பினான். ஒரு ஷஹாபியின் பெயரை பயன்படுத்தி மற்ற ஷஹாபாக்களுக்கும், மற்றொரு ஷஹாபியின் பெயரை பயன்படுத்தி  மற்றொரு ஷஹாபிக்கும் போலி கடிதங்கள் எழுதினான். அதுபோல் முக்கிய ஷஹாபாக்களின் பெயர்கள் பயன்படுத்தி ஆளுனர்களுக்கு கலிபா ஆவர்களை பற்றியும், அவர்களின் ஆட்சி அதிகாரங்கள் பற்றியும் பொய்யான தகவல்களையும், அவதூறுகளையும் பரப்பினான். அன்றைய காலகட்டத்தில் தகவல்களை உண்மைப்படுத்த தொழில்நுட்ப வசதிகள் இல்லாத சூழ்நிலையால் கடிதம் கிடைக்கப்பெற்றவர்கள் அச்செய்திகளை உண்மை என்று நம்பும் சுழ்நிலை ஏற்பட்டது. ஏனெனில் அந்த அளவிற்கு நன்கு திட்டமிட்டு  எழுதினான். அப்துல்லாஹ் இப்னு ஸபாவின் ஒரே நோக்கம் கிலாபத்தை உடைக்க வேண்டும், பெருமானார் (ஸல்) அவர்கள் உருவாக்கிய உன்னத இஸ்லாமிய சமுதாயத்தை பிளவுபடுத்த வேண்டும் என்பது மட்டுமே. அந்த நோக்கத்தில் ஓரளவிற்கு வெற்றியும் பெற்றான் போலிக்கடிதங்கள் மற்றும் அவதூறின் மூலமாக. 

அதனுடைய தொடர்விலைவுகளால் உத்தம நபியின் இரு மகள்களை ஒருவர் பின் ஒருவராக திருமணம் முடித்திருந்த ஹஜ்ரத் உஸ்மான் (ரலி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் (ஷஹீதாக்கப்பட்டார்கள்). அதோடு நிற்காத அப்துல்லாஹ் இப்னு  ஸபா, ஹஜ்ரத் அலி (ரலி) அவர்களுக்கும் நமது தாய் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குமிடையேயும் சில சலசலப்புகளையும் ஏற்படுத்தினான். அப்போது ஏற்பட்ட சில குழப்பத்தினால் சில ஷஹாபாக்களும் கொல்லப்பட்டார்கள். அன்று நயவஞ்சக யூதன்  அப்துல்லாஹ் இப்னு ஸபா  உருவாக்கிய குழப்பம் மற்றும் அவதூறு பிரச்சாரத்தின் தாக்கத்தினை நம் இஸ்லாமிய சமுதாயம் இன்று வரை சந்தித்து வருவதை அனைவரும் அறிவோம். 

இவற்றை நாம் சொல்லவருவதின் நோக்கம், அன்று நயவஞ்சக யூதன் அப்துல்லாஹ் இப்னு ஸபா செய்த காரியமும் இன்று போலியான பெயர்கள்களில் சிலர் செய்யும் அருவருக்கத்தக்க அவதூறு காரியமும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்பதால் தான். நமதூரில் வெளிவந்துக்கொண்டிருக்கும் போலி மொட்டைக்கடிதாசிகளின் உரிமையாளர்களை நாம் யூதன் என்று நிச்சயமாக சொல்லமாட்டோம். அது எமது நோக்கமும் அல்ல. ஏனெனில் அந்த அதிகாரம், ஆற்றலும் அல்லாஹ் ஒருவனுக்கே இருக்கிறது. ஆனால் இந்த மொட்டைக்கடிதாசிகளின் நோக்கமும், செயலும் யூத செயல்களை ஒத்து இருப்பதை நிச்சயம் மறுக்க முடியாது. இதனால் ஏற்படும் விளைவென்ன, பயனென்ன என்று பார்த்தால் குழப்பமும், சச்சரவுளுமே மிஞ்சும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. போலிக்கடிதங்களும், அவதூறு பிரச்சாரங்களும் எது மாதிரியான் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று அறிவதற்கே வரலாற்று உண்மையை தற்போதைய மொட்டைக்கடிதாசியோடு ஒப்பிட்டு கூறுகிறோம் 

Thursday, 25 April 2013

ஆஸ்திரேலியாவில் சாலைகளிலும் நடைப்பெறும் இஸ்லாமிய அழைப்புப்பணி...!




இஸ்லாத்தை கடுமையாக வெறுத்து கொச்சைபடுத்திய‌வர் இஸ்லாத்தை தழுவினார்.!!!!




"I Hate Islam" என்று இஸ்லாத்தை கொச்சைபடுத்தி சினிமா தயாரித்தவர் "I Follow Islam" என்று இஸ்லாத்தை தழுவினார்.!!!

நெதர்லாந்தில் Geert Wilders என்பவர் தோற்றுவித்த Party for Freedom எனும் வலதுசாரி கட்சியின் உறுப்பினர் அர்னோட் வேன் டோர்ன் (Arnoud van Doorn). சமீபத்தில் இவர் இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார். கடந்த சனிக்கிழமையன்று (20-04-2013) மதீனாவிற்கும், ஞாயிறு அன்று (21-04-2013) மக்காவிற்கும் வருகை தந்த டோர்ன் தனது உம்ராவை நிறைவு செய்துள்ளார். அத்துடன் ஷேக் அப்துர் ரஹ்மான் அல் ஸுதைஸி உட்பட பல மார்க்க அறிஞர்களைச் சந்தித்து உரையாடியுள்ளார். சரி இதில் என்ன பெரிய பிரமாதம் இருக்கிறது? 

இவரது பின்னணியைப் பற்றி சற்று தெரிந்து கொள்வது நல்லது. இறைத்தூதரை இழிவு படுத்தும் நோக்கில் ஃபித்னா எனும் திரைப்படத்தைத் தயாரித்த Geert Wilders ன் Party for Freedom தலைவர்களில் ஒருவராவார் டோர்ன். 

விஷமத்தனமான இத்திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் எழுந்த மக்கள் எழுச்சியைக் கண்டு வியந்து போனார். "இந்த மனிதர் முஹம்மதுக்கு முஸ்லிம்களிடத்தில் அப்படி என்ன சிறப்பு?" என்று பெரும் ஆச்சரியம் அடைந்து அக் கேள்விக்கு விடை காணும் ஆய்வில் இறங்கி விட்டார். 

"அந்த ஒரு கேள்விக்கான தேடலே இன்று என்னை முஸ்லிம் ஆக்கியது" என்கிறார் டோர்ன். Dutch பாராளுமன்ற உறுப்பினரான இவர், தமது மன மாற்றத்தை தனது ட்விட்டர் பக்கம் மூலம் வெளியுலகத்திற்கு பகிரங்கமாக அறிவித்தார். "லாயிலாஹா இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்!" எனும் அவரது டிவிட்டர் ஷஹாதா அரபி மொழியில் அமைந்திருந்தது. 

மறுமையின் வேளை நெருங்கிவிட்டது!



உரை: மவ்லவி அப்துல் பாஸித் அல்புகாரீ

இடம்: பூஷகிர் மஸ்ஜித், ஹுரா, பஹ்ரைன்


மனிதர்களுக்கு அவர்களுடைய கணக்கு விசாரணை (நாள்) நெருங்கிவிட்டது. அவர்களோ மறதியில் புறக்ககணித்ததவர்களாகஉள்ளனர். (அல்குர்ஆன் 21:1)

Sunday, 21 April 2013

உங்கள் தேர்வு! (கோபம்)



(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான். 
(அல்குர்ஆன் 3:134)

பொதுவாக இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவருமே, விரும்பினாலும், விரும்பா விட்டாலும், பிற மனிதரோடு இணைந்தே வாழ வேண்டிய நிலையில் இருக்கிறோம். அந்தப் பிற மனிதன், நமது கணவனாக, மனைவியாக, நண்பனாக உறவினராக, சகபணியாளனாக, மாற்று மதத்தைச் சார்ந்தவர்களாக, இப்படி பல்வேறு வகையினராக இருக்கலாம். அவர்கள் அனைவருமே, நல்லவர்களாக இருந்திடுவதில்லை. அவர்களில் ஒருசிலர் தீயவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும்போது, அவமானப்படுத்தும் போது ஆத்திரம் வரும். பழிவாங்க வேண்டும் என்று நமது உள்ளம் ஆர்ப்பரிக்கும். அதுதான் இயற்கையும் கூட.

ஆனால்… உலகில் ஒவ்வொருவருமே இப்படி பழிவாங்கும் எண்ணத்தோடு அலைந்தால் அல்லது திருப்பித்தாக்க ஆரம்பித்துவிட்டால், உலகில் உடலாலும்-மனதாலும் ஊனமுற்றவர்களே நிறைந்து காணப்படுவார்கள். உலகில் ஏற்படும், அத்தனை பிரச்சனைகளுக்கும் அடித்தளம் என்ன வென்று நீங்கள் யோசித்துப் பார்த்தால், சகிப்புத் தன்மை இல்லாததுதான் முக்கிய காரணம் என்பதை நாம் உணரலாம். எனவே தான், மேற்கண்ட இறைவசனத்தின் மூலம் இஸ்லாம் சகிப் புத் தன்மையை இறை நம்பிக்கையாளனின் பண்புகளில் ஒன்றாகக் குறிப்பிடுகிறது. கோபம் கூடாது என்று கூறவில்லை மாறாக கோபத்தை மென்று விழுங்கி விடுமாறு வலியுறுத்துகிறது.