அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நம் சங்க உறுப்பினர்களின் புகைப்படம். அன்று இருந்த கூட்டு பங்களிப்பு இன்று இல்லை! அன்று இருந்த எண்ணிக்கை இன்று இல்லை!
இன்றைய
காலகட்டம் மட்டுமின்றி என்றும் எப்பொழுதும் முஸ்லிம்களுக்கும்கிடையில்
முக்கியத்தேவை ஒற்றுமை, கூட்டு பங்களிப்பு, சகோதரத்துவம். தான் விரும்பியதையே தன்னுடைய
சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்றும்,
ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் உடலின்
பாகங்கள் போன்றவர்கள் என்றும் நமது உத்தம
தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு
தெளிவாக கூறி இருக்கிறார்கள்.
'உங்களில்
ஒருவர் தமக்கு விரும்புவதையே தம்
சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக
மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி)அறிவித்தார்.
(நூல்: புகாரி)
சகோதரத்துவம்,
ஒற்றுமை, உதவி, சேவை, அர்பணிப்பு
போன்ற உன்னத நோக்கத்துடன் நமதூரைச்சேர்ந்த
நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உழைப்பாலும்,
முயற்சியாலும் 03.12.1993 ஆண்டு நமதூர் பெரிய
பள்ளிவாசல் முன்னாள் இமாம் B.M. ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் துபாய்
வந்தபோது நீடூர் நெய்வாசல் அஸோஸியேஸன் -துபாய் என்ற சங்கம் இனிதே
ஆரம்பிக்கப்பட்டது.
இந்த துபாய் சங்கத்தின் மூலமாக
நமதூரில் உள்ள ஏழமையில் வாழ்ந்த
சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவிகளும், திருமணம் உதவிகளும், கல்வியை தொடர சிரமப்பட்டவர்களுக்கு
கல்வி உதவித்தொகைகளும், இலவச பாட நூல்களும்,
அமீரகத்தில் வாழும் சகோதரர்களிடமிருந்து பித்ரா
தொகைகள் ஒன்றினைக்கப்பட்டு அதனை ஊரில் வாழும் ஏழை
எளிய சகோதர சகோதரிகளுக்கும் பகிந்தளிப்பதும், இன்னும் எத்தனை எத்தனையோ
உதவிகளையும் இன்றளவும் சிறப்பாக செய்து வருவதை அனைவரும்
அறிவோம்.
நூற்றுக்கணக்கான
நமதூரைச்சார்ந்த சகோதரர்கள் அமீரகத்தில் வசித்துவருகிறோம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையில் மாதாந்திர
ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதும், நமதூரின் முன்னேற்றத்திற்கு நம்மால் இயன்ற பணிகள்
பற்றியும், ஏழ்மையில் வசிக்கும் நமதூரைச்சேர்ந்த சகோதர சகோதரிகளின் துயர்
துடைக்க நம்மால் இயன்ற பணிகள்
பற்றியும் ஆலோசனை செய்கிறோம்.








