அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
சில ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட நம் சங்க உறுப்பினர்களின் புகைப்படம். அன்று இருந்த ஒற்றுமை இன்று இல்லை! அன்று இருந்த எண்ணிக்கை இன்று இல்லை!
இன்றைய
காலகட்டம் மட்டுமின்றி என்றும் எப்பொழுதும் முஸ்லிம்களுக்கும்கிடையில்
முக்கியத்தேவை ஒற்றுமை, சகோதரத்துவம். தான் விரும்பியதையே தன்னுடைய
சகோதரனுக்கும் விரும்ப வேண்டும் என்றும்,
ஒரு முஸ்லிமும் இன்னொரு முஸ்லிமும் உடலின்
பாகங்கள் போன்றவர்கள் என்றும் நமது உத்தம
தலைவர் பெருமானார் (ஸல்) அவர்கள் நமக்கு
தெளிவாக கூறி இருக்கிறார்கள்.
'உங்களில்
ஒருவர் தமக்கு விரும்புவதையே தம்
சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக
மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்)
அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி)அறிவித்தார்.
(நூல்: புகாரி)
சகோதரத்துவம்,
ஒற்றுமை, உதவி, சேவை, அர்பணிப்பு
போன்ற உன்னத நோக்கத்துடன் நமதூரைச்சேர்ந்த
நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உழைப்பாலும்,
முயற்சியாலும் 03.12.1993 ஆண்டு நமதூர் பெரிய
பள்ளிவாசல் முன்னாள் இமாம் B.M. ஜியாவுதீன் ஹஜ்ரத் அவர்கள் துபாய்
வந்தபோது நீடூர் நெய்வாசல் அஸோஸியேஸன் -துபாய் என்ற சங்கம் இனிதே
ஆரம்பிக்கப்பட்டது.
இந்த துபாய் சங்கத்தின் மூலமாக
நமதூரில் உள்ள ஏழமையில் வாழ்ந்த
சகோதர சகோதரிகளுக்கு மருத்துவ உதவிகளும், திருமணம் உதவிகளும், கல்வியை தொடர சிரமப்பட்டவர்களுக்கு
கல்வி உதவித்தொகைகளும், இலவச பாட நூல்களும்,
அமீரகத்தில் வாழும் சகோதரர்களிடமிருந்து பித்ரா
தொகைகள் ஒன்றினைக்கப்பட்டு அதனை ஊரில் வாழும் ஏழை
எளிய சகோதர சகோதரிகளுக்கும் பகிந்தளிப்பதும், இன்னும் எத்தனை எத்தனையோ
உதவிகளையும் இன்றளவும் சிறப்பாக செய்து வருவதை அனைவரும்
அறிவோம்.
நூற்றுக்கணக்கான
நமதூரைச்சார்ந்த சகோதரர்கள் அமீரகத்தில் வசித்துவருகிறோம். ஓவ்வொருவருக்கும் இருக்கும் பல்வேறு பணிகளுக்கிடையில் மாதாந்திர
ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கொள்வதும், நமதூரின் முன்னேற்றத்திற்கு நம்மால் இயன்ற பணிகள்
பற்றியும், ஏழ்மையில் வசிக்கும் நமதூரைச்சேர்ந்த சகோதர சகோதரிகளின் துயர்
துடைக்க நம்மால் இயன்ற பணிகள்
பற்றியும் ஆலோசனை செய்கிறோம்.
பல ஊர்களுக்கு சங்கமே இல்லாத சூழ்நிலையில், அல்லாஹ்வின் கிருபையால் நமதூருக்கு சங்கம் என்ற ஒரு அமைப்பு இருக்கிறது. சொற்ப
எண்ணிக்கையில் வசிக்கும் மற்ற மற்ற ஊர்
சகோதரர்கள் செய்யும் பணிகளை ஒப்பிடுகையில் நாம்
செய்யும் சேவையின் தற்போதைய அளவானது சொற்பமாகவே தெரிகிறது.
அன்பார்ந்த
சகோதரர்களே, நாம் எவ்வளவோ சம்பாதிக்கிறோம். பிறருக்கு தெரிந்தும் தெரியாமலும் பல்வேறு தர்மங்களையும், உதவிகளையும்
செய்துவருகிறோம். அந்த உதவியின் தொடர்ச்சியாகவோ,
தர்மத்தின் ஒரு பகுதியாகவோ நம்
சங்கத்தின் சார்பாக வசூலிக்கப்படும் நபர்
ஒன்றுக்கு மாதம் பத்து திர்ஹம்
என்ற சந்தா தொகையினையும் வழங்கிடவும்,
அதன் மூலம் தேவையிலும் ஏழ்மையிலும்
வாழும் நமதூரைச்சார்ந்த சகோதர சகோதரிகளின் துயர்
துடைக்க முயற்சி செய்வோம். நாம்
கொடுப்பதோ சுமார் பத்து திர்ஹம்
மட்டுமே. ஆனால் பல்வேறு பத்துகள்
இணையும் போது அதன் மதிப்பும்
அதன் பலனும் பெரியது
என்பதை நாம் நினைவில் கொள்வோம்.
நமதூரில்
எத்தனையோ சகோதர சகோதரிகளுக்கு கல்வி
உதவி தேவைப்படுகிறது, மருத்துவ உதவி தேவைப்படுகிறது, கல்வி
உதவி தேவைப்படுகிறது, அத்தியாவசிய தேவையான இருக்க இடம்,
உடுத்த உடை, உண்ண உணவு,
வேளை தேடி அமீரகம் வரும்
சகோதரர்களுக்கு வேலைவாய்ப்பு, அமீரகத்தில் வசிக்கும் சகோதரர்களுக்கு வட்டியில்லாத கடன் போன்ற தேவைகள்
காணப்படுகிறது. நூற்றுக்கணக்கில் இங்கே
இருந்து வருமானம் ஈட்டும் நாம் மேற்கூறிய
தேவைகளை பூர்த்தி செய்ய இந்த சிறிய
பங்களிப்பினையும் செய்வதற்கு முயற்சி செய்வோம்.
மாதாந்திர
ஆலோசனைக்கூட்டதில் தவறாமல் கலந்துக்கொண்டு நல்ல ஆலோசனைகள் வழங்கி ஒற்றுமையுடன் நம்
ஊரின், நம் இஸ்லாமிய சமுதாயத்தின்
வளர்ச்சியில் நம்முடைய பங்களிப்பும் இருப்பதற்கு முயற்சி செய்வோம். இன்ஷா
அல்லாஹ் நாம் செய்யும் ஒவ்வொரு தர்மத்திற்கும், உதவிக்கும்
நிச்சயமாக தக்க கூலியினை வழங்குவதற்கு
எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும்
காத்திருக்கிறான்.
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்."
(அல்குர் ஆன் 2:215)
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்த (தானியங்கள், கனி வகைகள் போன்ற)வற்றிலிருந்தும், நல்லவற்றையே (தான தர்மங்களில்) செலவு செய்யுங்கள்;
(அல் குர் ஆன் 2:267)
யார் தங்கள் பொருள்களை, (தான தர்மங்களில்) இரவிலும், பகலிலும்; இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்கின்றார்களோ, அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.
(அல் குர் ஆன்: 2:274)
நீங்கள் நேசிக்கும் பொருள்களிலிருந்து தானம் செய்யாதவரை நீங்கள் நன்மை அடைய மாட்டீர்கள்;. எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும், நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.
(அல் குர் ஆன் 3:92)